Monday, August 13, 2018

நாசா அறிவுப்பு மு.க. இறுதி ஊர்வலத்தில் 2.17 கோடி மக்கள் வெள்ளம்!

அமெரிக்காவிலுள்ள [NASA] நாசா கலைஞர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் இரண்டு கோடியே 17 லட்சம் மக்கள் 'நேரில்' அஞ்சலி செலுத்தினர் என்று  கண்டுபிடித்தது. இது [தற்செயலாக] விண்வெளிக்கோள்கள் மூலம் நாசாவில் நிகழ்ந்த செயல். மேலும் படிக்க...

அண்ணா, எம்ஜிஆர், மற்றும் உலகத்தலைவர்கள் எல்லோரையும் விட கலைஞர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் வந்த "மக்கள் வெள்ளமான இரன்டு கோடியே 17 லட்சம் தான் உலக சாதனை என்று நாசா கூறியுள்ளது." அதுவும் 2018-ல்...ஏகப்பட்ட தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யும் இந்த காலத்தில் [உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிளிலும்] இவ்வளவு மக்களா..ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்த என்று நாசா நெகிழ்ந்து போய் தன் ஆராய்ச்சியை உலக நன்மைக்காக மேலும் முடுக்கிவிட்ட்டது. அப்போது தான் நாசாவிற்கு புரிந்தது....இந்தக்கூட்டம் "தானா சேர்ந்த கூட்டம்" என்று.

ஏற்கனவே ராமர் பாலம் இயற்கையான மணல் திட்டுக்கள் அல்ல என்றும் அது ட்வுள் ராமர் வானர சேனையுடன் சீதையை காப்பற்ற 'இலங்கைக்கு போட்ட  பாலம்' என்று நாசா [NASA] கண்டுபிடித்தது தெரிந்ததே. அதே மாதிரி, திருநள்ளாறு மேலே பறக்கும் [satellites] சாட்டலைட்கள்  சனீஸ்வர பகவான் [power] பவரினால் சில வினாடிகள் 'நின்று' பிறகு போகும் என்று நாசா [NASA] அறிவித்தது எல்லோருக்கும் தெரிந்ததே. நமது முன்னோருக்கு தெரிந்த சனீஸ்வர பகவான் பவரைப் [power] பற்றி வெள்ளைக்காரன் சொன்னால் தான் நம் மர மண்டைகளுக்கு ஏறும்.  இப்போதாவது நாம் அதை நம்புகிறோம் என்று சந்தோஷப்படுவோம். நிற்க.

சமீபத்திய நாசா அறிக்கை படி இப்பொழுது, திருநள்ளாறு மேலே பறக்கும் [satellite] சாட்டலைட்கள் ஒரு வினாடி கூட நிற்பதில்லையாம். ஏன் அப்படி என்று நாசா ஆராய்ச்சி செய்த போது, புது கடவுள், அதாவது, "கருணாநிதீஸ்வர பகவானாக மெரினா பீச்சில் எழுத்தறியுள்ளதால் இப்போது பறக்கும் [satellites] சாட்டலைட்கள்  மெரினா பீச்சில் "கருணாநிதீஸ்வர பகவானாக"  எழுந்தருளியுள்ள இடத்தின் மீது பறக்கும் போது  "சில அல்ல பல வினாடிகள்" நின்று பிறகு பறக்கிறதாம்.

பின்குறிப்பு: 
திருநள்ளாறு மேலே பறக்கும் [satellites] சாட்டலைட்கள் ஒரு வினாடி கூட இப்போது நிற்காததற்கும் ...மெரினா பீச்சில் கலைஞர் கருணாநிதி"கருணாநிதீஸ்வர பகவானாக"  எழுந்தருளியுள்ள [நாளிலிருந்து] அந்த இடத்தின் மீது பறக்கும் போது  [satellites] சாட்டலைட்கள் சில அல்ல பல வினாடிகள் நின்று பிறகு பறப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நாசா ஆராய்ந்த போது தெரிந்த உண்மைகள்...

சனீஸ்வரன் [ஏழரை நாட்டான் சனி பிடித்தால்] கெடுதல் செய்யும் பகவான் என்று எல்லோருக்கும் தெரிந்ததே. அதை திருநள்ளாறு சென்று சாந்தப்படுத்தி பரிகாரம் செய்துவிட்டால், அதானால் பாதிப்பு ஏற்பட்டவர்களை அதே சனீஸ்வர பகவான் காப்பாறுவார்.

இப்பொழுது, மெரினா பீச்சில் எழுந்தருளியுள்ள மக்களுக்கு நல்லதே செய்யும் "கருணாநிதீஸ்வர பகவான்'  அந்த சனீஸ்வர பகவான் பவரை [power] "முழுவதும்" அடக்கி விட்டதால், இனிமேல் திருநள்ளாறு சென்று பரிகாரம் தேடவேண்டாம்---இதை நான் சொல்லவில்லை "அமெரிக்காவிலுள்ள [NASA] நாசா" சொல்கிறது. இனிமேல் [satellites] சாட்டலைட்கள் திருநள்ளாறு  மேலே பறக்கும் பொது அங்கு ஒரு வினாடி கூட நின்று பறக்காது என்று நாசா ஆராய்ச்சி செய்து அறிவித்துள்ளது.

பின்குறிப்பிற்க்கு பின்குறிப்பு:

சென்னை மெரினாவில் எழுந்தருளியுள்ள கருணாநிதீஸ்வர பகவான் கோயிலில்....முக்கிய அங்கமான அர்ச்சகர்கள் கிடையாது. தட்சணைகள் கிடையாது. அதை விட முக்கியம் உண்டியல்கள் கிடையாது. கும்பிட விரும்புவார்கள் கும்பிட்டுவிட்டு....போகவும்.

அப்படியும் பரிகாரம் செய்யணும் என்று நினைப்பவர்கள் ஒரு கறுப்புக் கண்ணாடி வாங்கி சனிக்கிழமை அன்று ஓரு ஏழைக்கு தானமாக கொடுத்துவிடுங்கள். இந்த தானத்தை [satellites] சாட்டலைட்கள் திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு குறுந்செய்தியாக சமஸ்க்ரிதத்தில் அனுப்பிவிடும்....சனீஸ்வர பகவானுக்கு மொழி புரியவேண்டுமல்லவா!