Thursday, January 10, 2019

Breaking News:நல்லா புல்லா கேட்டுக்குங்க...டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் லீவு?!

தமிழ்நாட்டு குடிமகன்களுக்கு Breaking News!!!  சாவுங்கடா! பொங்கல் பரிசு 1000 ரூபாயும் கிடையாது; டாஸ்மாக் கடைகளுக்கும்  3 நாள் லீவு!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 3 விடுமுறை விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசின் நிதி நிர்வாகத்துக்கு பெருமளவில் வருவாய் ஈட்டித்தருவது டாஸ்மாக் ஆகும். தினசரி மட்டுமல்லாது வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் வருமானம் இரட்டிப்பாகும் அளவுக்கு மதுக்கடைகளை குடிமகன்கள் வரவேற்கின்றனர். 

The tamilnadu government announces 3 days leave for tasmac shops

அதே நேரத்தில் ஊர் பகுதிகளில் மதுக்கடைகள் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பின்னர், அந்த கடைகள் வேறு ரூபத்தில் மீண்டும் வந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இந்நிலையில், அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு அதிக விடுமுறை கிடைக்கும் மாதமான ஜனவரியில் டாஸ்மாக் கடைகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கலுக்கு அடுத்த நாளான 16-ந் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து, 21-ந் தேதி வள்ளலார் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடியிருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதே ஜனவரி மாதத்தில் 26-ந் தேதி குடியரசு தினத்தையொட்டியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கடைகள் ஆகியவை மூன்று நாள் முழுவதுமாக முடப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-tamilnadu-government-announces-3-days-leave-tasmac-shops-338469.html