Saturday, May 18, 2019

கோட்சே முதலில் இந்துவே இல்லை: அப்புறம் ஏம்பா சண்டை?

வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னால் இந்து என்ற மதமே இல்லை--மறைந்த 'காஞ்சி பெரியவர்' தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் இதை கூறியுள்ளார் !
இந்துமதம் என்பதே வருணாஸ்ரமத்தை 'சூத்திர மரமண்டைகளில்' ஏற்றவே! இதற்கு ஒத்து; நால்வகை வர்ணத்தை வலியுறுத்த கீதை இந்துமத நூல் என்று சொல்லி 'நூல்' விட்டார்கள்.

ள்ளு [ ராஜாதி ராஜாக்கள், கணேசர்வாள்கள் ] தான் எண்ணைக்கு காய்கிறது என்றால் எலிப் புழுக்கைகள் [தமிழ் இம்சைகள், பொறிஉருண்டைகள், அல்லக்கைகள் ] எதற்கு காய்கிறது[கள்]?

வருணாஸ்ர படிக்கட்டில் அவா மேலே உக்காந்துண்டு, எலிப்புழுக்கைகளை, அல்லக்கைகளை  ஆட்சி செய்து கொண்டு, எலிப்புழுக்கைகள்  கைகளை கட்டி வாய் பொத்தி சேவகம் செய்ய, ஒத்து ஊத வைத்த விந்தையை பாராட்டாமல் இருக்கமுடியுமா? 

இல்லாவிட்டால் சூப்பர் பவர் என்று பீத்திக்கொள்ளும்--ராக்கெட் விடும்  இந்த காலத்திலேயும்-- பீ அள்ள [ராக்கெட் விடும் புண்ணியவான்கள் பீ அள்ள இயந்திரங்களை உபயோகப் படுத்தமுடியாதா?] இன்றும் ஒரு ஜாதி வைத்துள்ளதை என்ன வென்று சொல்வது? சொல்லுங்கள் முட்டாள்களே!
----------------------
'காஞ்சி பெரியவர்'--தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறியதை படியுங்கள்...Quote unquote...
"நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!"

மேலும் படிக்க கீழே உள்ள இந்த சுட்டியை க்ளிக் செய்யுங்கள்...மறைந்த 'காஞ்சி பெரியவர் கூறிய உண்மைகளை நீங்களே படியுங்கள்....

http://www.kamakoti.org/tamil/part1kural43.htm

------------------------------------------------------
'காஞ்சி பெரியவர்'--தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் கூறியதை படியுங்கள்...Quote unquote...
"பெயரில்லாத மதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)
இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது.
ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியைக் கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருந்ததல்லவா? ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள். ஒரு தேசத்துக்குப் பக்கத்திலுள்ள சீமையின் பெயராலேயே அதை அடுத்துள்ள சீமைகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதுண்டு. வேடிக்கையாக ஒன்று சொல்கிறேன்.
இந்த ரீதியில்தான் ஸிந்துப் பிரதேசத்தைக் கண்ட அந்நியர்களும் அதையடுத்து வந்த பாரத தேசம் முழுவதையும் ஹிந்து தேசமாக்கிவிட்டனர்.
ஆனால் ஹிந்து என்பது நமது பூர்வீகப் பெயர் அல்ல. வைதிக மதம், ஸநாதன தர்மம் என்றெல்லாம் சொல்கிறோமே, அவைதான் பெயரா என்றால், அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும்போது இந்த மதத்துக்கு எந்தப் பெயருமே குறிப்பிடவில்லை."

மேலும் படிக்க கீழே உள்ள இந்த சுட்டியையும் க்ளிக் செய்யுங்கள்...மறைந்த 'காஞ்சி பெரியவர் கூறிய உண்மைகளை நீங்களே படியுங்கள்....

பின்குறிப்பு:
அப்ப கோட்சே  இந்து இல்லை என்றால் யார் அவர்.
வேற யாரு? அவர் பிராமணர் மட்டுமே!!  பின்னே? 
ஜாதிகள் நிறைந்த இந்தியாவில், இல்லாத 'இந்து மதத்தை' வெள்ளைக்கரன் நமக்கு 150 வருடங்கள் முன்பு நாமகரணம் செய்தது அசிங்கமா இல்லை? 

---சொல்லுங்கள்  எலிப் புழுக்கைகளே !