Saturday, June 15, 2019

புளுத்துப்போன புராணப் புளுகை விற்கும் அல்ப ஜெயமோகனுக்கு செம்ம அடி!

தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்! பின்னே புளித்து புளுத்துப்போன புராணப் புளுகை எழுதினால் தாக்கத்தான் படுவார்; படுவா! 

கன்னியாகுமரியில் புளித்துப்போன தோசை மாவு குறித்து கடைக்காரரிடம் கேட்ட எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 

புளித்துப் போயிருந்த தோசை மாவு இந்நிலையில் நேற்றிரவு ஜெயமோகன் பார்வதிபுரத்தில் வீட்டின் அருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்த போது தோசை மாவு வாயில் வைக்க முடியாத அளவுக்கு மிகவும் புளித்துப்போயிருந்துள்ளது. திருப்பிக்கொடுத்த ஜெயமோகன் இதையடுத்து கடைக்கு மீண்டும் சென்ற ஜெயமோகன், மாவு புளித்துப்போயிருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனக்கு அந்த தோசை மாவு வேண்டாம் என்றும் கூறியுள்ளார் ஜெயமோகன். வாக்குவாதம் முற்றி கைகலப்பு இதனால் கடைக்காரர் செல்வத்துக்கும், எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/kanyakumari/writer-jayamohan-has-been-attacked-by-the-shop-keeper-in-kannyakumari/articlecontent-pf382862-354135.html