Pages

Sunday, June 16, 2013

ஜிட் குடுமி வைத்தால் மூளை வளரும் என்றால் அங்கன குடுமி வைத்தால் எது வளரும்?


குடுமி வச்சவன் கிட்டே சொல்லு அவன் நம்புவான் என்பது மாதிரி எவனாவது சூXXல குடுமி வச்சிருப்பவன் கிட்டே சொல்லு அவன் 'தான்' நம்புவான்; இது மருத்துவக்கல்லூரி பழமொழி! முதலில், சூ...ல குடுமியை "பின் குடுமி" என்று இனி அழைப்போம். மருத்தவக் கல்லூரியில் நண்பர்கள் பேசும் போது எவனாவது புளுகினா நாங்கள் சொல்வது, "எவானவது 'பின்னால குடுமி' வைத்திருப்பவன் கிட்டே போய் சொல்லுடா...அவன் தான் உன்னை நம்புவான்." இன்று எப்படி என்று தெரியவில்லை; தெரிந்தால் கூறுங்களேன்.

சரி வாதத்திற்கு வருவோம். உச்சி குடுமி வைத்தால் மூளை வளரும் என்ற டூப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்; அப்ப சைடு குடுமி வைத்த சிதம்பரம் தீட்சதர்களுக்கு என்னா வளரும்?  சைடு மூளை வளரும் என்று அறிவியல் விளக்கம் கொடுப்பீர்கள்; ஒகே..! உங்கள் வெண்டக்காய் விளக்கத்தை ஒத்துக் கொள்கிறேன். அப்ப பின் குடுமி வைத்தவர்களுக்கு எது வளரும்? 

அப்ப உங்க அறிவியல் விளக்கம் படி, பின்பக்கம் குடுமி..இழுக்கற இழுப்புல முன் பக்கம் உள்ள எது வளரும்? எப்படி வளரும் என்ற அறிவியல் விளக்கம் கொடுத்தால் நலம். 

பின் பக்கம் ஏது மனிதனுக்கு குடுமி என்று கேள்வி கேட்பவர்களுக்கு
நான் ஐந்தாவது வருடம் படிக்கும் போது...வெளி நோயாளிகள் பிரிவில் சில நோயாளிகளுக்கு Per Rectum Examination செய்ய வேண்டும். அப்படி செய்யும் முன்பு அவர்களிடம் நான் "சோதனைக்கு வரும் முன் பின் பக்கம் உள்ள எல்லா "சொத்துக்களையும் வெளியேற்றி விட்டு வரவேண்டும். முக்கியமாக, எல்லா மயிரை முழுவதும் மழித்து விட்டு வரவேண்டும்" என்று சொன்னாலும்...

என்று சொன்னாலும், நம் மக்கள் பின் பக்கம் ஃபுல் லோடோட தான் வருவார்கள். தமிழன் அடி முட்டாள். ஆம். எல்லா மலத்தையும் இறக்கிவிட்டு வா, முழுக்க மழித்து வீட்டு வா என்று சொன்னாலும், நம் ஆட்கள் கேட்க மாட்டர்கள்; ஆமாம், என்றைக்கு தமிழன் மற்றவர்கள் அறிவுரையை கேட்டு நடந்து கொண்டிருக்கிறான்? கேட்டால் ஆயிரத்தெட்டு காரணங்கள் கொடுப்பான் ஏன் அவ்வாறு மலத்தை இறக்கவில்லை ஏன் எல்லா மயிரையும் சிரைக்கவில்லை என்று. எங்களுக்கு காரணங்கள் முக்கியமில்லை; குண்டியை நன்றாக முழுவதும் பார்த்தால் தான் என்ன வியாதி என்று அறியமுடியும். 

ஒரு முறை நான் Per Rectum Examination செய்வதை மற்ற மாணவர்களுக்கு விளக்கும் படி எங்கள் [சின்ன] வாத்தியார்கள் சொன்னார்கள் (அதாங்க, Civil Assistant Surgeons). வந்த நோயாளியின் வேட்டியை அவித்து பார்த்தல் பெரிய காடே 'அங்கன' இருந்தது, கொடிய மிருகங்களை தவிர..! முன்பே எவ்வளவு சொல்லியும், மயிரை மழிக்காமல் வந்தாதால் எனக்கு சிறிய கோபம்.

ஏம்பா ஏன்  "பின் குடுமியை" எடுக்காமல் இங்கு சோதனைக்கு வந்தாய் என்று கேட்டவுடன்...நம்ம மூன்றாவது நான்காவது வருடம் படிக்கும் மாணவர்கள்/மாணவிகள்  சிரித்தார்கள். அப்படி கேட்டது தவறு என்று இன்று நான் உணர்கிறேன். ஆனால், அவர் என் பெரிய வாத்தியாரிடம் சென்று நான் அவரை அசிங்கப்படுத்தி விட்டேன் என்ற புகார் வாசித்தார்.

இங்கு ஒன்று சொல்லவேண்டும்...அன்று எங்களுக்கு 75% attendance இருந்தால் போதும். எவானாலேயும் எந்த புடுங்கியாலும் எங்களை பரீட்சை எழுதுவதை தடுக்க முடியாது; ஃபெயிலும்  ஆக்க முடியாது. மேலும், எங்களை முழுவதும் பரீட்சை செய்யும் டாக்டர்கள் எல்லோரும் டில்லி, பாம்பே, பெங்களூர், CMC வேலூர்..இங்கிருந்து வந்ததால், நாங்கள் எங்கள் கருத்துக்களை தைரியமாக சொல்வோம். பயமே அறியாத மாணவர்கள் நாங்கள்.

என் பேராசிரயர் என்னை திட்டினார், "நீ எப்படி பின் குடுமி என்று சொல்லலாம். அது அவரை அசிங்கப் படுத்துகிறது" என்றார். அதற்க்கு நான், எல்லா மயிரையும் சேர்த்து கட்டுவதற்கு பெயர் தான் 'குடுமி' என்று எனக்கு பள்ளியில் சொல்லிக் கொடுத்தார்கள். அதானால், நான் சூXX குடுமி என்று அசிங்கமாக சொல்லாமல் "பின் குடுமி" என்று சொன்னேன். இதில் என்ன தவறு. பின் குடுமி என்று சொல்வது தவறு மற்றும் ஆபாசம் என்றால், நீங்களே அதற்க்கு ஒரு நல்ல பெயரை சொல்லுங்கள் என்றேன். இது வரை என் பேராசிரியர் பின் குடுமிக்கு மாற்றுப் பெயர் சொல்லவில்லை; அவரும் இப்போ மலை ஏறிவிட்டதாக கேள்விப்பட்டேன்...ஆகவே...

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...பின் குடுமிக்குஒரு நல்ல தமிழ்ப் பெயரை...!

Thank you very much for taking time to read my blog...Happy Blogging!
நம்பள்கி