Thursday, August 2, 2018

Default-பிரியாணி திருடன்னாலே பண்டார கட்சி ஆள் தான்.

பிரியாணிக் கடைக்காரருடன் பாக்சிங் ஆடிய ரவுடி யுவராஜ் இந்து மகா சபாவில் இருந்தவன்; பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார் அமைப்புகளில் வலம் வந்தவன் . அப்புறம், அவன் இப்படித்தான் இருப்பான். இவன் கோவையில் பிரியாணி அண்டா திருடியவர்களை விட எவ்வளோ மேல். 

மேலும் படிக்க...
சென்னை: சென்னையில் பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு கும்மாங்குத்து விட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார் அமைப்புகளில் வலம் வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடையே வேலையே காசு கொடுக்கும் இடத்துக்குப் போய் அடிதடி, கலாட்டா போன்றவற்றை செய்வதுதான் என்றும் ஊகிக்க முடிகிறது. இவரைப் பார்த்தால் அரசியல்வாதி போலவே இல்லை. அரசியல்வாதி என்ற போர்வையில் வலம் வரும் கூலிப்படைக்காரர்களைப் போலத்தான் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பார்க்க முடிகிறது. அந்த மாதிரிதான் இவரது செயல்பாடுகளை ஊகிக்க முடிகிறது. 

ஆர்எஸ்எஸ் தொண்டரா யுவராஜின் பின்னணி தொடர்பாக சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவரது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் உள்ளது. அதில் இவரது புரபைல் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புரபைல் படத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருப்பது போல போட்டுள்ளார். 

டைசன் பிடிக்குமாம் இவரது விளையாட்டு விருப்பப் பட்டியலில் பிடித்த விளையாட்டு வீரர்களாக பாக்ஸிங் மைக் டைசனை மட்டும் லைக் செய்துள்ளார். எனவே இவர் ஒரு பாக்ஸிங் வெறியர் என்பதை முகநூலிலும் வெளிப்படுத்தியுள்ளார் (முழு பாக்ஸராக மாற எத்தனை பிரியாணிக் கடைக பர்னிச்சர்களைப் போட்டு உடைத்தாரோ). இந்து மகாசபா செயலாளர் அதேபோல அகில இந்திய இந்து மகா சபாவின் மாநிலச் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார். இதுதொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் அகில இந்திய இந்து மகாசபாவின் கோடம்பாக்கம் ஸ்ரீஜியின் 42வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

 காவி அரசியல்வாதி அதேபோல இதே இந்து மகசாபாவின் விழா ஒன்றில் மேடையில் இவருக்கு காவி பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்வது போல காட்சி உள்ளது. மொத்தத்தில் இவர் ஒரு காவி புரட்சியாளராகவும் சில காலம் வலம் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

பாரம்பரியம் இதை வைத்து தற்போது இணையதளத்தில் டிரோல் செய்து வருகிறார்கள். அதாவது கோவையில் பாஜகவினர் நடத்திய ஒரு வன்முறை வெறியாட்டத்தின்போது பிரியாணி அண்டாவைத் தூக்கிச் சென்றனர் பாஜகவைச் சேர்ந்த சிலர். அந்த வரிசையில் இப்போது பிரியாணிக் கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜுக்கும் சங் பரிவார் பின்னணி இருப்பதால் இந்த "பிரியாணி பாரம்பரியம்" தொட்டுத் தொடர்கிறது என்று கிண்டலடித்து வருகின்றனர்.

சரியாப் போச்சு!

பின்குறிப்பு: 
இந்த பிரியாணி குத்து சண்டைக்கும்...வீடியோக்கும் [திமுகவை அசிங்கப்படுத்த] அவா ஒரு லட்சம் இவாளுக்கு கொடுத்தாளாம்!

Read more at With Photos and other evidences...about  ரவுடி  யுவராஜ்!
https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-this-yuvaraj/articlecontent-pf318148-326335.html


3 comments:

  1. பாஜக காரணையா தளபதி ஸ்டாலின் கட்சியை விட்டு தூக்கி உள்ளார்

    இதில் இருந்து புரிவது பாஜகவும் திமுகவும் ஒன்னு , இது தெரியாதவன் வாயில் மண்ணு

    ReplyDelete
  2. ஆமாம்! முதலில் பாஜகவில் அண்டா திருடிவிட்டு இங்கு வந்துள்ளார். அவர் முதலில் இந்த சபையில் இருந்தார்; அப்புறம் பாஜக கட்சியில் வேற இருந்துள்ளார். தீவிர இந்து பக்தர். பிறகு திமுக.

    ReplyDelete
    Replies
    1. HE was a BJP when stole the Biriyani Andaa. Before that he was in Inthu makaa sabha!

      Delete