Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Saturday, January 19, 2019

[கேட்கவேண்டிய] பார்க்கவேண்டிய கரு. பழனியப்பனின் அருமையான காணொளி!

படிப்பதின் [புத்தகங்கள்] அவசியம் பற்றிய அருமையான பேச்சு! பேசத்தெரிந்தால் மட்டும் போதாது; அதிகமான புத்தகங்கள் [பாடப் புத்தகங்கள் அல்ல] படிப்பதினாலேயே உலக அறிவு, பேச்சுத்திறமை, analytical skills, விவாதத் திறமை...இப்படி பலவற்றை நம்மை அறியாமலே நாம் வளர்த்துக்கொள்வோம்.


Friday, December 21, 2018

இதைவிட டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு மக்கள் என்ன மரியாதை செய்துவிட முடியும்? நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை: 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் உடலுக்கு பூஜாரி ஒருவர் காட்டிய கற்பூர ஆரத்தி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையில் 1971ல் கிளினிக் ஆரம்பித்து, தன்னிடம் வரும் நோயாளியிடம் 2 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சையளித்தவர் டாக்டர். ஜெயச்சந்திரன். இவர் தனது 71வது வயதில், நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். 
High respect given to doctor Jayachandran

கடைசியாக அவர் நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம், ரூ.5 மட்டுமே. எனவே, அப்பகுதி மக்கள் அவரை ஒரு கடவுளை போல மதிக்கிறார்கள். 5 ரூபாய் டாக்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரரானார் ஜெயச்சந்திரன். ஏழை மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேலான இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவித் தொகை வழங்குதல் என பல சேவைகளில் ஈடுபட்டவர் ஜெயச்சந்திரன். இந்த நிலையில், அவரது உடல் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டபோது, கொடுக்கப்பட்ட மரியாதை மக்கள் அவர் மீது வைத்த அபரிமிதமான அன்பை காட்டுவதை போல இருந்தது. பொதுவாக இறந்தவர்கள், பூதவுடலை இடுகாட்டுக்கு எடுத்து செல்லும்பொழுது கோவில் அருகே செல்ல வேண்டி வந்தால், மேளம் அடிப்படை நிறுத்தி விட்டு அமைதியாக கடந்து செல்வார்கள். ஆனால், ராயபுரத்தில் மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயசந்திரன் இறுதி ஊர்வலத்தின்போது வேறு மாதிரி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. 
High respect given to doctor Jayachandran

ராயபுரம், எல்லை காக்கும் ஸ்ரீ யோக முனீஸ்வரன் ஆலயம், அருகே ஜெயச்சந்திரன் பூத உடல் கொண்டு செல்லப்பட்டபோது, கோவில் பூசாரி கற்பூரம் ஏற்றி ஜெயச்சந்திரன் பூதவுடலுக்கு அதை காண்பித்தார். மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன், மக்கள் மனதில் கடவுளுக்கு நிகரான இடம் பிடித்துள்ளார் என்று அந்த பூஜாரியின் செயல்பாடு எடுத்துக்காட்டியுள்ளது. 

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/high-respect-given-doctor-jayachandran-337005.html

Monday, November 12, 2018

தமிழக ஆவின் மந்திரி பால் பாக்கெட் பாலாஜியின் அறிவுரைகள் !

மது விற்பனையை நிறுத்தினால் குடிகாரர்கள் எதையாவது குடித்து உயிரிழப்பர்- பால் பாக்கெட் பாலாஜி--இது காரணப் பெயர். லியோனியின் வீடியோ பாருங்கள்;  நேரம்: 5.00 --6.50; அவசியம் பாருங்கள்; வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....



நேரம்: 5.00 --6.50அவசியம் பாருங்கள்;ம் வயிறு வலிக்க சிரிப்பீர்கள்...இது உறுதி....

ஸ்ரீவில்லிப்புத்தூர்: மது விற்பனையை நிறுத்தினால் குடிமகன்கள் பாண்டிச்சேரிக்கோ, கர்நாடகத்திற்கோ சென்று குடித்து உடம்பை கெடுத்து உயிரிழப்பார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: 


2 வருடமா? 2000 வருடங்கள்


பால் பாக்கெட் பாலாஜி என்ற அறிஞரின் அறிவுரையை மேலும் படிக்க ....கீழே க்ளிக் செய்து படிக்கவும்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/if-you-stop-tasmac-drunkers-will-drink-something-die-minister-rajendra-balaji-333935.html



Sunday, November 11, 2018

குவிந்திருக்கும் 88000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை ஒழிக்க ஒரு யோசனை!

பார்க்க வீடியோ: 20% மின்சாரம் மட்டுமே அணுவில் இருந்து அமெரிக்காவில் உற்பத்தியாகிறது! இங்கு குப்பைகளை [மருத்துவ கழிவுகள் தவிர] வேறு மாநிலத்திறிற்கு அனுப்பி [இழப்பீடு கொடுத்து] அழிக்கலாம். ஏழை மாநிலங்கள் அவைகளை பண வரவிற்க்காக வாங்கி அழிக்கும்.

பின்னே...மருத்துவ கழிவுகளை என்ன செய்யாலாம் என்று யோசித்தபோது...
இரண்டு இந்தியர்கள் [ இந்தியாவின் மேற்கு மாநிலத்தை சேர்ந்தவர்கள்} வாங்கி--அதை அழிக்க ஒரு டன்னுக்கு இவ்வளவு டாலர்கள் நஷ்டஈடு என்று பணம் வாங்கிக் கொண்டு, நம் தமிழ் நாட்டில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பினார்கள். அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று மருத்தவ கழிவுகள் மற்றும் இப்போ E- Waste எல்லாம் இங்கு வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் எல்லா கசுமால குப்பைகளை  கொட்டுவதற்கு என்றே உருவாக்கப்பட்ட துறைமுகம்.

ஏற்கனவே கேரளாவில் உள்ள கோழிப்பனண்ணையின் கழிவுகளை பாலக்காடு வழியாகவும், நாகர்கோவில் வழியாகவும் தமிழ் நாட்டில் வந்தது கொட்டி விட்டு போகிறார்கள். கேராளாவில் இந்த கழிவுகளை கொட்ட கம்யூனிஸ்ட் சேட்டன்கள் விடமாட்டர்கள். அப்ப...இருக்கவே இருக்கு தமிழ் நாடு, sorry, தமிழ் காடு...

எப்படி இதை செய்கிறார்கள்?

சோதனை சாவடிகளில் பணத்தை வெட்டினால் தூய தமிழன், காசை வாங்கிப் போட்டு கொண்டு கழிவுகளை தமிழ் நாட்டின் border area -வில் கொட்ட விடுவான். சரி! அங்குள்ள மக்கள் கொதித்து எழுந்தால், இருக்கவே இருக்கு நம்ம போலீஸ் மற்றும் கவுன்சிலர், MLA --க்கள் பொய் கேசு போட்டு அங்குள்ள மக்களை அச்சறுத்துவான்...

அமெரிக்கர்கள் தடுமாறுகிறார்கள்!
 எப்படி இந்த தேங்கிக் கிடைக்கும் 88,000 டன்கள் அமெரிக்க அணுக்கழிவுகளை அழிப்பது என்று பேய் முழி முழிக்கிறார்கள்...

அதானால், எனக்கு ஒரு யோசனை! 
அந்த யோசனை வரக்காரணம்.... 

லகத்தின் குப்பைத்தொட்டி இந்தியா! 
இந்தியாவின் குப்பைத்தொட்டி தமிழ் நாடு; 
தமிழ்நாட்டின் குப்பைத்தொட்டி தென் தமிழ்நாடு....
அப்புறம் என்ன?

PS:
டிரம்ப் அரசாங்கம் அணுக்கழிவுகளை yucca மலைகளில் சேமிக்கலாம் சென்று ஒரு bill  தயார் செய்கிறது; அதை அந்த மாநிலம் அனுமதிக்காது என்பது என் அனுமானம். இங்கு ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு மாதிரி....
மத்திய அரசு அவைகளை நம் நாடு மாதிரி ஆட்டுவிக்கமுடியாது....
அதனால்....டிரம்ப் அரசுக்கு என் ஆலோசனை...

------கொண்டாங்கடா அந்த அமெரிக்க அணுக்கழிவுகளை நம் தென் தமிழ்நாட்டில் கொட்டி அமெரிக்க மக்களுக்கு நன்மை செய்வோம்...


Saturday, November 10, 2018

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுரவட்ட சதுர்வேதி திடீர் மாயம்!

இந்தியாவில் பெண்டாளவே சாமியாராகிறார்கள்; கூடவே பெண்கள் பணத்துடன் வந்தால் 'சதுரவட்ட சதுர்வேதிக்கு கசக்குமா என்ன? பசுவையும் கன்றையும் ஒட்டிக்கொண்டு போய் விட்டான் ஐயங்கார் டுபாக்கூர் சாமியார் சதுரவட்ட சதுர்வேதி. 

அது என்னடா சதுர்வேதி...சீத பேதி என்று பெயர்?
அது சரி! சாமியாரென்று சொன்னாலே போலி தான் பிறகு ஏன்  நடு சென்டர் மாதிரி போலி சாமியார் என்று கூறவேண்டும். வார்த்தைகளில் சிக்கனம் வேண்டும்---இது நான் சொல்லலை--மறைந்த எழுத்தாளர் சுஜாதா சொன்னது! அதானால் சாமியார் என்று சொன்னாலே போதும்----அது போலி திருட்டு சாமியார் தான்!

அம்மா, மகளை கடத்திய சாமியார் சதுர்வேதி திடீர் மாயம்.. கெட்டப் சேஞ்சுடன் சுற்றுவதாக தகவல்

சென்னை: தன்னை தானே சாமியார் என்று சொல்லிக் கொண்ட சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அறிவித்துள்ளது. எம்ஏ பட்டதாரியான சதுர்வேதி, வேதம் மற்றும் இந்து தத்துவவியல் பற்றி சொற்பொழிவு ஆற்றி வந்தவர். இதனால் இவருக்கு நிறைய பக்தர்கள் வெகுசீக்கிரத்திலேயே உருவானார்கள். இவருக்கு வேற பெயர்களும் உள்ளன. அதாவது வெங்கடாசரவணன், பிரசன்ன வெங்கடாச்சாரியார் என்று பல பெயர்களை ஒவ்வொரு இடத்திலும் சொல்லி வந்தார். ஆழ்வார்பேட்டையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வந்தார். 

பாருங்கள் இவன் மூஞ்சியையும் முகரையும்; ஆனால், விஷயத்தில் கில்லாடி போல....இல்லாவிட்டால், அம்மாவுடன் பெண்ணையும் கூடவே பணத்தையும் கடத்திய இவன்--ஒரே நேரத்தில் இரு  சாக்கடைகளில் தூர்வாரிண இவன் பலே கில்லாடி...வேலையில் படு சுத்தம் போல! இந்த மன்மத குஞ்சுவின் போஸை நாமும் கொஞ்சம் ரசிப்போமே! 

அம்மா - மகள்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-chennai-police-declared-swami-chaturvedi-as-the-culprit/articlecontent-pf335718-333808.html?c=hweather

Friday, November 2, 2018

சிவகுமாருக்கும் அவரை செல்பி எடுத்தவருக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்!

போனை உடைத்ததின் மூலம் செல்பி எடுக்கும் முட்டாள்களுக்கு பாடம் புகட்டிய சிவகுமாருக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்! அதே மாதிரி, போனை சிவகுமாrரை உடைக்கவைத்து உலகிற்கு,...யோகா, ராமாயணம், மகாபாரதம், கடவுள். விரதம், பரிகாரம், etc..."இதனால் மனிதனுக்கு ஒரு புடலங்கா நன்மையையும் இல்லை; மக்களிடம் தான் ஒரு புத்தன் என்று புளுக மேற்கொண்ட முயற்சி மட்டுமே"------என்ற மாபெரும் உண்மையை புரியவைத்த அந்த தம்பிக்கும் கோடானு கோடி நமஸ்காரங்கள்.




Wednesday, October 17, 2018

ஐதீகம் என்றால் என்ன?

அந்த கால பெருசுகள் தங்கள் வசதிக்கேற்ப உளரறியதை இந்த கால சிறுசுகள் மூடத்தனமா அப்படியே பின்பற்றுவது!